திங்கள், 30 ஜூலை, 2007

இயற்கை

வானத்து நட்சத்திரங்கள் விளக்குகளாய் மின்ன
வண்ணத் தோரணமாய் வான்வெளியில் வானவில்லும்
சூரிய கதிர்கள் புல் நுனி பனியில் ஊடுருவ
சுட்டாலும் சுகமே அவன் கதிர்கள்
இரவல் ஒளியில் இரவில் வரும் நிலவோ
இனிமை பொழுதில் இதமாய் ஒளிவீசும்

சொற்கள் தரும் சுகமே சொல்லும் நாவதனில்
சோகம் போக்கிவிடும் சுவையான வார்த்தைகள்
இளம் காலை போதினிலே இசைக்கும் புள்ளினங்கள்
இனிய நாளின் இனிதான ஆரம்பம்
இயற்கையே நீ தான் எத்தனை இன்பம்
இனி எங்கும் பரவசம் எங்கள் மனதில் !

1 கருத்து:

Unknown சொன்னது…

NALLA KARPANAI VAZHGA MY NAME IS V.KOLANJIYAPPAN & MY MAIL ID IS
kolanji.annai@hotmail.com