திங்கள், 30 ஜூலை, 2007

சின்னஞ்சிறு கிளியே

சின்னஞ்சிறு மலருக்கு இன்று பிறந்த நாள்
சிரித்து மகிழ்ந்து சுற்றம் சூழும் நாள்
புத்தாடை புனைந்து புத்துயிர் பெறும் நாள்
புதியதாய் பிறந்த நாளில் வாழிய பல்லாண்டு !

நீ பிறந்த போது மகிழ்ந்தனர் பெற்றோர்
நீ வளர்ந்த போது உவந்து பார்த்தனர்
உன் கனி மொழி வார்த்தை கற்கண்டாம் அவர்க்கு
உன் தங்க பாதங்கள் தாங்கின அவர் மார்பு

நீ சிரிக்கும் போதெல்லாம் முத்துக்கள் உதிர்ந்தன
நீ பேசிய மழலை வார்த்தைகள் அல்ல வைரங்கள்
பட்டாம் பூச்சி போல் நீ பறந்து திரிந்து வா
பட்டம் எழும்புதல் போல் வான்வெளியில் உலவி திரிந்து வா

பெரியவள் என்றொரு பருவமே வராமல்
பாடும் பறவையாய் நீ திரிந்து வந்தால்
எங்கள் உள்ளம் களிக்கும் உலகச் சுமை
உனக்கு வேண்டாம் எப்போதும் மகிழ்ந்திரு !

வெண்ணிலவில் குளித்து நட்சத்திரம் பிடித்து
சூரியத் தேரில் சுற்றுலா வரவேண்டும் நீ
சூழ்ந்திடும் தேவர்கள் மலர்கள் தூவ
சுற்றும் இவ்வுலகம் சுற்றி நீ வரவேண்டும் !

1 கருத்து:

Unknown சொன்னது…

Excellent Vijayan. Unnul oru nalla kavignan urangikkidanthaanaa?. Mikka magizhchi. Vazhthukkal. You can go to google transliteration and get your kavithai typed in Tamil itself and then post it in your blog. Anbudan...Gnani.