திங்கள், 30 ஜூலை, 2007

ஆசை…பேராசை

எனக்கொரு ஆசை நினைத்த போது நீ இருக்கும் இடம் வந்து சேர
எனது சுவாசம் முழுதும் நிரம்பிய உனது உயிர்மூச்சு
என்னுடன் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது
எத்தனை காலம் தான் இந்த சோதனை கண்ணே
எண்ணங்கள் மீது எனக்கு பொறாமை
ஏனெனில் அவை அடிக்கடி உன்னை தொட்டு பார்ப்பதால் !

பூமி ஏன் இத்தனை பெரியது அதனால் தானே
வானம் தொட்டு விடும் தூரம் என்றாலும்
உன்னை தொலை தூரம் வரை நான் காணவில்லை .
வையகம் குறுகிபோனால் நீ கூப்பிடு தூரத்தில்
வீதி தோறும் வெட்ட வெளியெங்கும் நாம் இணைந்தே திரிவோம்
காலையும் மாலையும் நம் கண்களுக்கு தெரியாது

வெறும் உறக்கம் போதும் அது உன் மடியினில் என்றால்
வேறெதுவும் வேண்டாம் வெறும் பேச்சே போதும்
நீ உதிர்க்கும் சொற்கள் என் உள்ளம் மட்டுமல்ல
உடல் வளர்க்கும் உயிர் துடிக்கும்
நீ பிறந்த மண்ணில் நான் பிறந்திருக்க வேண்டும்
நாளும் உனை காணாமல் நான் ஏங்கி போனேன் !

நீ அருகினில் இருந்தாலே எனக்கு எத்தனை சக்தி
உனது மேனியின் காந்த அலைகள் என்னை உயிர்ப்பிக்கும்
எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்வதென்றாலும்
உயிர் நீ இருக்கும் உலகுக்கே நானும் வரத் தயார்
வெறும் உலக வாழ்க்கை ----- நீயும் நானும்
ஆவிகளாய் அண்டசராசரமும் உலவி வருவோம் !

கருத்துகள் இல்லை: